‘அருண’ பத்திரிகைச் செய்தி குறித்து அனைத்துத் தரப்பினரையும் அழைத்து விரிவான விசாரணை நடத்தவும்…

“இந்திய உர வகைகளுக்கு வழங்குவதற்காகத் தனிப்பட்ட கணக்கில் 29 கோடி ரூபாய் வைப்பு – ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர தலையீடு” என்ற தலைப்பில், “சதி அக அருண” (அருண – வார இறுதி) பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தி உண்மைக்குப் புறம்பானதும் வெறுக்கத்தக்கதுமான செய்தியாகும் என்பதுடன், அதனை முழுமையாக மறுப்பதாக, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர அவர்கள் தெரிவித்தார்.

இந்த செய்தி தொடர்பாக அனைத்துத் தரப்பினரையும் அழைத்து முறையானதும் விரிவானதுமான விசாரணையொன்றை உடனடியாக நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதியின் செயலாளர் அறிவித்தார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Leave A Reply

Your email address will not be published.