தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

தெலங்கானாவில் நின்று கொண்டிருந்த டிரக் மீது கார் மோதியதில் வியாழக்கிழமை 6 பேர் பலியாகினர்.

தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து 180 கிமீ தொலைவில் உள்ள சூர்யாபேட்டை மாவட்டம் கோடாட் நகருக்கு அருகே ஹைதராபாத்-விஜயவாடா நெடுஞ்சாலையில் பழுது காரணமாக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிரக் மீது வியாழக்கிழமை அதிகாலை ஓட்டுநர் உள்பட 10 பேருடன் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், கார் பயணித்த ஒரு பெண் குழந்தை உட்பட 6 பேர் பலியாகினர். 4 பேர் லேசான காயங்களுடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக கோடாட் டிஎஸ்பி ஸ்ரீதர் ரெட்டி தெரிவித்தார்.

மேலதிக செய்திகள்

மீனவர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை!

கொள்ளை முயற்சியில் தோல்வியுற்ற ஆடவருக்குச் சிறை, பிரம்படி.

மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ராணுவ ஹெலிகாப்டர்கள்; 10 பேர் மரணம்.

குஜராத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய டில்லி அணி 4 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி.

உடல் எடையை குறைக்க ஆப்ரேஷன்; இளைஞர் உயிரிழப்பு – தந்தை கோரிக்கை!

பிரபல வங்கிக்கு அதிரடியாகத் தடை விதித்த ரிசர்வ் வங்கி

பரம்பரை சொத்துக்கு வரி.. பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம்

Leave A Reply

Your email address will not be published.