அதிக விலைக்கு சீனியை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை.

அதிக விலைக்கு சீனியை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளுக்கு சீனி கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு, அதிகாரசபைக்கு உண்டு. அத்துடன் அதிக விலைக்கு சீனியை விற்பனை செய்யும் அதிகாரிகள் தொடர்பில் பொதுமக்கள், நுகர்வோர் அதிகாரி சபை அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டியதும் அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.