வாகன விபத்தில் இளைஞன் பலி.

புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் வீதியில் தரித்து நின்ற வாகனத்துடன் மோதி இளைஞன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் நேற்று இரவு பதிவாகியுள்ளது. வேணாவில் புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த 21 அகவையுடைய மாரிமுத்து பவிசாந் என்ற இளைஞனே விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மின்சாரம் தடைப்பட்ட நிலையில் நகர் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இராணுவத்தினரின் வாகனத்தில் மோதி விபத்திக்குள்ளான இளைஞன் காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Leave A Reply

Your email address will not be published.