மதுபானங்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் உடனடியாக அறிக்கை…….

மதுபானங்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் அறிவிக்குமாறு கோரிக்கை
அரசாங்கத்தின் அல்லது கலால் திணைக்களத்தின் அனுமதியின்றி மதுபானங்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு மதுபான நிறுவனங்களுக்கு கலால் ஆணையாளர் நாயகம் ஜே. குணசிறி நேற்று (03) மதுபான நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளார்.

மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாக மதுபானங்களின் விலையை பல்வேறு விலைகளில் அதிகரிக்க நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அத்தகைய அதிகரிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் கலால் திணைக்களத்திடம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மதுபானங்களின் விலை அதிகரிப்பை வரி அதிகரிப்பின் ஊடாக நிதி அமைச்சு மேற்கொள்வதாகவும், இம்முறை நிதியமைச்சோ அல்லது கலால் திணைக்களமோ மதுபானங்களின் விலையை அறியாமல் அதிகரிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
அரசாங்கத்தின் அனுமதியின்றி மதுபானங்களின் விலை அதிகரிக்கப்பட்டால் அது தொடர்பில் கலால் திணைக்களத்துக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.