சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட சென்னை.

சென்னை: வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நீடிப்பதால் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் மேலும் 3 மணி நேரத்திற்குக் கனமழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. கனமழை முன்னெச்சரிக்கை தி.நகர் ரங்கநாதன் தெருவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்புத்துறை அறிவுறுத்தலின் பேரில் மின்சாரவாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. வடசென்னை மற்றும் வில்லிவாக்கம் பகுதிகளில் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 40 டிரான்ஸ்பார்மர்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

மழைநீர் வடிந்தவுடன் மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை தி.நகர் துரைசாமி சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.