முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி.

யாழ்ப்பாணம் காரைநகர் டிப்போவுக்கு அண்மையில் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

அவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் அவருடன் வந்த மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார், பலியானவர் காரைநகர் நெய்தலைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.