அறிமுக போட்டியில் அசத்திய ஸ்ரேயாஸ் ஐயர்.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் மயங்க் அகர்வால் 13, சுப்மன் கில் 52, புஜாரா 26, ரஹானே 35 என தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் – ரவீந்திர ஜடேஜா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தியது.
அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் கடந்தார். அவருடன் இணைந்து விளையாடிய ரவீந்திர ஜடேஜாவும் அரைசதம் அடித்து அசத்தினார்.

இதன்மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ஸ்ரேயாஸ் ஐயர் 75 ரன்களுடனு, ரவீந்திர ஜடேஜா 50 ர
ன்களுடனும் களத்தில் உள்ளனர்.

நியூசிலாந்து அணி தரப்பில் கைல் ஜேமிசன் 3 விக்கெட்டுகளையும், டிம் சௌதி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.

Leave A Reply

Your email address will not be published.