பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலைஞர் சுவதம் பாராட்டு விழா.

கலாச்சார திணைக்களமும் காரைதீவு பிரதேச செயலகமும்இணைந்து நடாத்தும் “கலைஞர் சுவதம்”கலைஞர்களை கெளரவப்படுத்துகின்ற நிகழ்வு காரைதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் 26-11-2021 இடம்பெற்றது.

இன்நிகழ்விற்கு அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இந்நிகழ்வில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி .எம் றின்ஸான் அவர்களும்,கலாசார உத்தியோகத்தர் ம.சதாகரன் ,கலாசார பிரிவு பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் M.மனோகரன் அவர்களும் ,அபிவிருத்தி உத்தியோகத்தர்களான V.விக்னேஸ்வரன், சிவலோஜினி ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கலைஞர்களுக்கான பாராட்டுவிருதுகளும்,சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கி கெளரவப்படுத்தப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.