புதையல் தோண்டலில் ஈடுபட்ட சந்தேகநபர் 11 பேர் கைது.

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள வில்காமம் மலை பிரதேசத்தில் புதையல் தோண்டலில் ஈடுபட்ட சந்தேகநபர் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், புதையல் தோண்டலுக்காக சந்தேகநபர்கள் பயன்படுத்திய உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள மலையில் கல்லுடைக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்ற நிலையில், சம்பவதினமான நேற்று இரவு மலைக்கு அருகில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஒரு குழுவினர் ஈடுபட்டுவருவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த தகவலுக்கயை அப்பகுதியை பொலிஸார் முற்றுகையிட்டபோது, அங்கு புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நேருபுரம் மற்றும் திருக்கோவிலைச் சேர்ந்த 11 பேர் கொண்ட குழுவினரை மடக்கிபிடித்து கைது செய்துள்ளனர்.

மேலும் அலவாங்கு, மண்வெட்டி மற்றும் புதையல் தோண்டுவதற்கான உபகரணங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.