குறிஞ்சாக்கேணி உயிரிழப்பு ஏழாக உயர்வு.

கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற படகு விபத்தில் சிக்கி திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 6 வயது சிறுமியொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியைச் சேர்ந்த எஸ்.நிபா (06வயது) என்றழைக்கப்படும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளாா். உயிரிழந்த சிறுமியின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.