வட ஆபிரிக்காவில் அல்-கொய்தா தலைவர் அப்தெல்மலேக் ட்ரூக்டெல் கொல்லப்பட்டார் – பிரான்ஸ்

வட ஆபிரிக்காவில் அல்-கொய்தாவின் தலைவரான அப்தெல்மலேக் ட்ரூக்டலை மாலியில் நடந்த ஒரு நடவடிக்கையில் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி, ட்ரூக்டெல் மற்றும் அவரது உள் வட்டத்தின் உறுப்பினர்களுடன் நாட்டின் வடக்கில் புதன்கிழமை கொல்லப்பட்டதாக பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சர் தெரிவித்தார்.

மே மாதம் நடந்த ஒரு நடவடிக்கையில் மாலியில் ஒரு மூத்த இஸ்லாமிய அரசு குழு தளபதியையும் பிரெஞ்சு படைகள் கைப்பற்றியதாக அவர் கூறினார்.

“தைரியமான நடவடிக்கைகள்” எனும் பெயரில் பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக கடுமையான தாக்குதல்களை தொடுத்துள்ளதாகவும் “எங்கள் படைகள், சஹேலில் தங்கள் கூட்டாளர்களின் ஒத்துழைப்புடன், அவர்களை இடைவிடாமல் வேட்டையாடுவார்கள்,” என்றும் மேலும் அவர் கூறினார்.

Comments are closed.