யாழ்.மாவட்டத்தில் மீண்டும் ஒரு சிலிண்டர் வெடிப்பு!

யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

யாழ்.நகருக்குள் 1ம் குறுக்குத் தெரு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்றையதினம் சிலிண்டர் ரெகுலேட்டர் வெடித்து தீ பற்றி எரிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதிகாலை 5 மணியளவில் சமையலில் ஈடுபட்டிருந்தபோது திடீரென அது வெடித்து பெரும் சுவாலையுடன் தீ பற்றி எரிந்துள்ளது.

இதனையடுத்து உடனடியாக வீட்டிலிருந்தவர்களால் சிலிண்டர் அணைக்கப்பட்டதால் , எவருக்கும் காயம் எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.