கொரணாவில் இருந்து குணமடைந்த கமல்ஹாசன்.

அமெரிக்காவுக்கு சென்றுவந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு லேசான இருமல் இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், கமல்ஹாசன் கொரோனா தொற்றில் இருந்து முழுவதுமாக குணமடைந்து விட்டதாக தெரிவித்துள்ள மருத்துவமனை நிர்வாகம், நாளை மறுநாள் வரை மருத்துவமனையில் இருப்பார் என்றும் வரும் 4ஆம் தேதி முதல் தனது வழக்கமான பணிகளை கவனிப்பார் என்றும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.