கூட்டமைப்பு பிரதேச சபை முன்னாள் உறுப்பினரின் உடல் சாவகச்சேரி வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் சாவக்கச்சேரி பொலிஸ் பகுதி தனங்கிளப்பு அறுகுவெளிப் பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டிலிருந்து, கூட்டமைப்பின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி போலீசார் தெரிவித்துள்ளனர்.

51 வயதையுடைய சுப்ரமணியம் சிவபாலன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் காவல் துறை கூறுகிறது.

அறுகுவெளி பிரதேசத்தில் உள்ள முன்னாள் பிரதேச சபை உறுப்பினரது இருப்பிடத்தில் இருந்து துர்நாற்றம் வீசியதில் சந்தேகம் ஏற்பட்ட பிரதேசவாசி ஒருவர் , சாவகச்சேரி பொலிஸாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில், பொலிஸ் உத்தியோகத்தர்கள் வீட்டிற்கு வருகைதந்து பரிசோதித்த பின்னர் சடலம் கைப்பற்றப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.