குடும்பஸ்தர் படுகொலை: இரு சந்தேகநபர்கள் சிக்கினர்!

கொழும்பு, பேலியகொட மீன் சந்தைக்கு அருகில் கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பேலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த 42, 45 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கொலைச் சம்பவத்தில், பேலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் பேலியகொட பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், சந்தேகநபர்களைக் கைதுசெய்துள்ளனர்.

சந்தேகநபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.