யாழ்ப்பாணத்தில் படகு கட்டும் தொழிற்சாலை அமைதற்கான விருப்பம்….

நீர்கொழும்பு, துங்கல்பிட்டியவில் தனியார் முதலீட்டாளர்களினால் செயற்படுத்தப்பட்டு வருகின்ற படகு கட்டும் தொழிற்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் யாழ்ப்பாணத்திலும் படகு கட்டும் தொழிற்சாலையை அமைதற்கான விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் முதலீட்டாளர்களினால் வெளிப்படுத்தப்பட்ட ஆர்வத்தினை வரவேற்றுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தேவையான ஒத்துழைப்புக்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

நோர்வே முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் செயற்படுத்தப்பட்டு வருகின்ற குறித்த படகு கட்டும் தொழிற்சாலைக்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டிருந்த கடற்றொழில் அமைச்சர், தொழிற்சாலையின் உற்பத்திகளை மேலும் விஸ்தரிப்பது தொடர்பாகவும், எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடியிருந்ததுடன், இம்மாத இறுதியில் விரிவான கலந்துரையாடலை நடாத்தி அனைத்து விடயஙகளும் ஆராயப்படும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.