மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையம் டக்ளஸ் தேவானந்தாவினால் திறப்பு.

இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நேற்று (10) பம்பலப்பிட்டியில் திறந்து வைக்கப்பட்டது.

தரமான கடலுணவுகள், நியாயமான விலையில் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக மீன் விற்பனை நிலையங்களை நாடளாவிய ரீதியில் அமைக்கும் வேலைத் திட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த வருடம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுமார் 9 விற்பனை நிலையங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.