அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து! 4 குழந்தைகள் உயிரிழப்பு!

துருக்கியில் இஸ்தான்புல் நரில் உள்ள 5 அடுக்குமாடி கட்டுடம் ஒன்றில் ஏற்ப்பட்ட திடீர் தீ விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த கட்டிடத்தின் அடித்தளத்தில், ஏற்பட்ட இந்த தீயானது அடுத்தடுத்து பரவி பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் 4 வெளிநாட்டு குழந்தைகள் பலியாகியுள்ளதாகவும் 2 பேர் காயமடைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்த குழந்தைகளின் தாயார் மற்றும் மற்றொரு குழந்தை மீட்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.