நுவரெலியா விபத்தில் ஒருவர் பரிதாப மரணம்!

நுவரெலியா – உடப்புஸ்ஸலாவை பிரதான வீதி, ஹவாஎளிய பெண்கள் உயர்நிலை சிங்களப் பாடசாலைக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இராகலையிலிருந்து நுவரெலியா நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, ஹாவாஎளிய பகுதியிலிருந்து நுவரெலியாவை நோக்கிச் சென்ற நுவரெலியா மாநகர சபைக்குச் சொந்தமான கழிவு நீர் ஏற்றும் பவுசர் ஒன்றின் பின் பகுதியில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நுவரெலியா தர்மபாலபுர, ரூவான் எளியவைச் சேர்ந்த டி.எம்.எஸ்.குமார திஸாநாயக்க என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய பவுசரின் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.