முல்லைத்தீவு ஆழிப்பேரலை நினைவாலயத்தில் நினைவேந்தல்!

ஆழிப்பேரலையால் உயிரிழந்தோர் நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு ஆழிப்பேரலை நினைவாலயத்தில் இன்று (26) உறவுகளின் கண்ணீர் வெள்ளத்தில் நடைபெற்றுள்ளது.

இன்று காலை நடைபெற்ற நிகழ்வில் ஆழிப்பேரலையில் உறவுகளைப் பறிகொடுத்தவர்களின் உறவினர்கள் பங்குகொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது கத்தோலிக்க – இந்து மத குருக்கள் இறந்தவர்களுக்காக விசேட வழிபாடுகளை மேற்கொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.