மலக்குடலில் மறைத்து தங்கம் கடத்தல்.. கோவை விமானநிலையத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்

சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட 2.2 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த வருவாய் புலனாய்வு அதிகாரிகள் இருவரை கைது செய்தனர்.

சார்ஜாவில் இருந்து கோவை வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து புதன்கிழமை காலை சார்ஜாவில் இருந்து வந்த விமான பயணிகளை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நசரூதீன் முகமது தம்பி, கலீல் ரகுமான் முஸ்தபா,தஸ்தகீர் காஜா மைதீன், சாதிக் சையது முகமது ஆகிய 4 பேரை பிடித்து வருவாய் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் ஆடைகளில் மறைத்து வைத்தும், மலக்குடலில் மறைத்து வைத்தும் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து இவர்களிடம் இருந்து ரூபாய் 1.10 கோடி மதிப்பிலான 2.2 கிலோ தங்கம் பறிமுதல் செய்த அதிகாரிகள் மலக்குடலில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்த நசரூதீன் முகமது தம்பி, கலீல் ரகுமான் முஸ்தபா ஆகிய இருவரை மட்டும் கைது செய்தனர். மற்ற இருவரிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.