மின் கட்டணம் உயராது! – அமைச்சர் காமினி லொக்குகே அறிவிப்பு.

“தற்போதைய சூழ்நிலையில் மின் கட்டணத்தை அதிகரிக்கும் திட்டம் இல்லை.”

இவ்வாறு மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

நாட்டில் பொருட்களின் விலைகள் நாளாந்தம் அதிகரிக்கின்றன. இந்நிலையில் மின்சார கட்டணமும் உயருமா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டில் பொருட்களுக்குச் சிறிதளவு தட்டுப்பாடுகள் உள்ளன. ஆனாலும், வரிசை யுகம் உருவாகவில்லை.

அதேபோல் மின்கட்டணத்தில் எவ்வித மாற்றமும் வராது. பழைய கட்டணமே அறிவிடப்படும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.