யாழ். இந்துக் கல்லூரி மாணவன் சடலமாக மீட்பு

யாழ். காரைநகர் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

காரைநகர் பகுதியின் கசூரினா கடலில் குளித்துக் கொண்டிருந்த போது, அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற் போன மாணவன் சுமார் 4 மணி நேர தேடுதலின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கோண்டாவில், தில்லையம்பதி பகுதியைச் சேர்ந்த 17 வயதான யோகராசா லோகீஸ்வரன் என்ற யாழ். இந்துக் கல்லூரி மாணவனே உயிரிழந்துள்ளார்.

கோண்டாவிலிருந்து, புத்தாண்டு தினமான நேற்றைய தினம் சனிக்கிழமை 20 பேர் காரைநகர் கசூரினா உல்லாசக் கடற்கரைக்குச் சென்று குளித்துக் கொண்டிருந்த நிலையில் இருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அதனை கண்ணுற்ற ஏனையவர்கள் அவலக்குரல் எழுப்பியதை அடுத்து அங்கிருந்தவர்கள் ஒருவரை மீட்டனர். மற்றையவர் கடலில் அடித்து செல்லப்பட்ட நிலையில், அவரைத் தேடும் பணியில் கடற்படை மற்றும் உள்ளூர் மீனவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

சுமார் 4 மணி நேர தேடுதலின் பின்னர் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற் போன மாணவன் யோகராசா லோகீஸ்வரன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.