குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு இது தான் காரணமா? வெளியான உண்மை தகவல்!

இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் திகதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இதில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் கடுமையான காயத்துடன் மீட்கப்பட்டு பெங்களூர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி கடந்த 15ஆம் திகதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து ஏர் மார்ஷல் மகேந்திர சிங் தலைமையிலான குழு முப்படை விசாரணையை நடத்தி வருகிறது. இந்த குழு சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்த போது கருப்பு பெட்டி கிடைத்தது.

தற்போது விசாரணை முடிவடைந்த நிலையில் ஹெலிகாப்டர் விபத்துக்கு மோசமான வானிலை மற்றும் விமானிகளின் கவனக்குறைவு தான் இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மன்வேந்திர சிங் குழு இந்த அறிக்கையை சட்டரீதியாக ஆய்வு செய்து விரைவில் தாக்கல் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.