நீருக்குள் செல்லும் நீண்ட பாலத்தை திறந்து வைத்தது சீனா.

நீருக்குள் செல்லும் மிக நீண்ட பாலத்தை சீனா திறந்துள்ளது. ஜியாங்சு மாகாணத்தில் உள்ள தைஹூ என்ற ஏரியில் (Taihu in eastern China’s Jiangsu Province ) இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப் பாதை ஏறத்தாழ 1.56 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கின. கிட்டத்தட்ட 11 கிலோ மீற்றர் நீளம் கொண்ட இந்தப் பாலத்தைக் கட்டமைக்க 2 மில்லியன் கனமீற்றருக்கும் அதிகமான கொன்கிரீட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பாலத்தினுள் 18 மீற்றர் அகலத்தில் 6 பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாகன ஓட்டுநர்களின் சோர்வைப் போக்கும் வகையில் வண்ணமயமான LED மின் விளக்குகளும் பாலத்தினுள் பொருத்தப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.