கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 7 பேர் உயிரிழப்பு.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆண்கள் நால்வரும் பெண்கள் மூவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 119ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 141 பேர் குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 67 ஆயிரத்து 77 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 91 ஆயிரத்து 231ஆக பதிவாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.