நடுவானில் கர்ப்பிணிப்பெண்ணுக்கு விமானத்தில் பிரசவம்:

நடுவானில் கர்ப்பிணிப்பெண்ணுக்கு கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்தார்.கனடா நாட்டின் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றி வருபவர் டாக்டர் ஆயிஷா காதிப்.

இவர் சம்பவத்தன்று கத்தார் நாட்டின் தோஹாவில் இருந்து உகாண்டா நாட்டின் என்டெப்பே செல்லும் கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்தார்.

அந்த விமானத்தில், சவுதி அரேபியாவில் இருந்து உகாண்டாவில் உள்ள சொந்த ஊருக்கு, இடம் பெயர்ந்த பெண் தொழிலாளி பயணம் செய்தார். அவர் கர்ப்பிணி ஆவார். இவருக்கு விமானத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது விமானத்தில் டாக்டர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று பணிப்பெண் ஒருவர் விசாரித்துள்ளார்.

உடனே டாக்டர் ஆயிஷா எந்த தயக்கமும் இன்றி, தன் இருக்கையில் இருந்து எழுந்து விமானத்தில் கூட்டமாக இருந்த இடத்துக்கு சென்றார். அவர் யாரேனும் மாரடைப்பு போன்ற ஆபத்தான நிலையில் தவித்துக்கொண்டிருக்கக்கூடும் என்று கருதினார். ஆனால் அங்கே பிரசவ வலியில் கர்ப்பிணிப்பெண் துடித்துக்கொண்டிருந்தார். அவருக்கு டாக்டர் ஆயிஷா பிரசவம் பார்த்தார். பிரசவத்தில் டாக்டர் ஆயிஷாவுக்கு அந்த விமானத்தில் பயணித்த நர்ஸ் ஒருவரும், குழந்தை நல மருத்துவர் ஒருவரும் உதவினர்.

அப்போது அந்த விமானம் நைல் நதிக்கு மேலே 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. இந்த பிரசவத்தில் கர்ப்பிணிப்பெண் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

டாக்டர் ஆயிஷா அந்த பெண்ணுக்கு நல்லமுறையில் பிரசவம் பார்த்து, பெண் குழந்தை பிறந்தபோது அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்துள்ளனர். அந்த குழந்தைக்கு டாக்டர் ஆயிஷாவின் பெயரை ‘மிராக்கிள் ஆயிஷா’ என்று வைத்துள்ளனர். இதில் மகிழ்ந்து போன டாக்டர் ஆயிஷா, ஆயிஷா என்று பதிக்கப்பெற்றிருந்த தனது தங்க கழுத்தணியை (நெக்லஸ்) புதிதாக பிறந்த அந்த பெண் குழந்தைக்கு பரிசாக அளித்தார்.

இந்த ருசிகர சம்பவம் டிசம்பர் 5-ந்தேதி நடந்தது. ஆனால் டாக்டர் ஆயிஷா தனது பணியில் மிகவும் தீவிரமாக இருந்து நேரம் கிடைக்காமல் போனதால் இப்போதுதான் நடந்ததை வெளி உலகுக்கு சொல்லி இருக்கிறார். இது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.