பேராயருக்கு எதிராக ஞானசார தேரர் போர்க்கொடி!

நாட்டின் பொலிஸ்மா அதிபர் பதவியை, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் வழங்க வேண்டும் என்று ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் பிரதானி கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

பதுளையில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

“கர்தினாலின் சில செயற்பாடுகளைப் பார்க்கும்போது அவர் அதிகாரபூர்வமற்ற பொலிஸ்மா அதிபராகச் செயற்படுவதாகவே தென்படுகின்றது.

பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு வைக்கப்பட்ட சம்பவம் ஒரு சாதாரண விடயம் அல்ல. இந்த நாட்டில் விசாரணை நடத்தப்படும் முறையொன்று உள்ளது.

கர்தினால் தனது சமூகத்தின் சார்பில் குரல் கொடுக்க வேண்டும் என்பதில் பிரச்சினையில்லை. கர்தினால் பொலிஸ்மா அதிபரை விமர்சனம் செய்திருந்தார்.

அவ்வாறானால் பொலிஸ்மா அதிபர் பதவியை ஜனாதிபதி கர்தினாலிடம் வழங்குவதே பொருத்தமானது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.