சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்க ஆட்சேபனை இல்லை: சட்டமா அதிபர் திணைக்களம்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 18 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை பிணையில் விடுவிப்பதற்கு ஆட்சேபனை இல்லை என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக புத்தளம் மேல் நீதிமன்றில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், அவர் ஜனவரி 28 ஆம் திகதி பிணையில் அவரை விடுவிக்குமாறு வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தால் , அவரை பிணையில் செல்ல அனுமதிப்பது எனவும் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் பிணை மனு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.