எதிர்வரும் நாட்களில் மின் வெட்டுக்கு அவசியமில்லை.

எதிர்வரும் நாட்களில் அவசர நிலை தவிர ஏனைய நாட்களில் மின்வெட்டு தேவைப்படாது என மின்சக்தி அமைச்சரான காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையமும் அடுத்த சில நாட்களில் முழுமையாக இயங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

300 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிலக்கரி அனல்மின் நிலையம் இம்மாதம் 25 அல்லது 26ஆம் திகதிக்குள் முழுமையாக செயற்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே எதிர்காலத்தில் மின்வெட்டு தேவையென நம்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.