ஈரானில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக ஈரானியர்கள் போதைப்பொருள் கடத்தல்.

இலங்கை கடற்படையினர் ஒன்பது சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன், வெளிநாட்டுக் கப்பலொன்றில் இருந்த சுமார் 200 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளையும் கைப்பற்றியுள்ளனர்.
​​இலங்கையிலிருந்து 2,002 கிலோமீற்றர் தெற்கே சர்வதேச கடற்பரப்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கடற்படைஊடகப் பேச்சாளரும் தளபதியுமான இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த குழு ஈரானிய பிரஜைகள் என சந்தேகிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடற்படை, பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த 26 ஆம் திகதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஹெரோயின் கையிருப்பு உள்ளுர் கப்பலுக்கு மாற்றுவதற்கு தயார் நிலையில் இருந்த நிலையில்,
கப்பலை இடைமறிக்கும் போது ஹெரோயின் போதைப்பொருள் கடலில் வீசப்பட்டதுடன் சந்தேகநபர்களிடம் இருந்து 250 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஒன்பது சந்தேக நபர்களும் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சந்தேகநபர்கள், போதைப்பொருள் மற்றும் செய்மதி தொலைபேசிகள் தொடர்பில் கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.