‘புஷ்பா 2’ படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட பகத் பாசில்!!

முதலில் ஸ்டைலிஸ் ஸ்டாராக இருந்து தற்போது ICON ஸ்டாராக அவதாரம் எடுத்து, தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறப்பவர் தான் நடிகர் அல்லு அர்ஜீன்.

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ’புஷ்பா’ திரைப்படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்தப் படம் திரையரங்குகளில் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததோடு மட்டுமில்லாமல், ஓடிடியிலும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

அதுமட்டுமின்றி ’புஷ்பா’ திரைப்படம் ரிலீஸாகி ஒரு மாதம் ஆன நிலையில், தமிழகத்தில் மீண்டும் 50 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

புஷ்பா முதல் பாகத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் படத்தின் விறுவிறுப்பான இறுதிகட்டத்தில் போலீசாக எண்ட்ரீ கொடுத்த நடிகர் பகத் பாசில் அவருடைய கதாபாத்திரத்தை மிரட்டி இருந்தார். ஒரு கட்டத்தில் புஷ்பராஜூவாக நடித்திருந்த அல்லு அர்ஜுனையே ஒரு கட்டத்தில் தன் நடிப்பால் பின்னுக்கு தள்ளும் அளவிற்கு சும்மா வெறி தனமாக நடித்திருந்தார்.

இந்த படத்தின் கிளைமாக்ஸில் பகத் பாசிலை அல்லு அர்ஜுன் அவமானப்படுத்தி ஜட்டியுடன் ஓட வைப்பதுடன் படம் முடிந்து இருக்கும். இதனால் இரண்டாம் பாகத்தில் பகத் பாசில் புஷ்பாவை எப்படி பழி வாங்குகிறார் என்பதே கதைகளமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இரண்டாம் பாகத்தின் கிளைமாக்சில் புஷ்பாவை பகத் பாசில் சுட்டுக் கொன்று விடுவார் என்றும் தகவல் கசிந்து வருகிறது.

இதற்கிடையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போ வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், சற்றுமுன் ‘புஷ்பா 2’ படத்தின் மாஸ் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பகத் பாசில் வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் புகைப்படம் மிரட்டலாக உள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தால் ‘புஷ்பா 2’ படத்துக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.