வடக்கின் மீனவர்களுக்காக குரல் கொடுக்க களம் இறங்கிய, சிங்கள மீனவ சமுதாயம் !

வடக்கின் கடற்றொழில் பிரச்சினை தொடர்பில் மீனவர்கள் இன்று கொழும்பில் உள்ள கடற்றொழில் அமைச்சை முற்றுகையிட்டனர்.

இதன்படி அமைச்சின் அதிகாரிகள் பிரச்சினைக்கு தீர்வு காண வாயிலுக்கு வந்த போதும் மீனவர்களின் கூச்சல் காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.

எவ்வாறாயினும், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் ஐவர் போய் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அனுமதியளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கூடியிருந்த மீனவர்கள் , இந்திய மீனவர்களது ஆக்கிரமிப்பை எதிர்த்தும் , இலங்கை அரசுக்கும் , அதிகாரிகளுக்கும் எதிராக கோசமிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.