அராலியில் 15 இலட்சம் ரூபா பெறுமதியான நகை திருட்டு.

யாழ்ப்பாணம், அராலி தெற்கில் வீடொன்றில் புகுந்த திருடர்கள் சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.

குறித்த வீட்டில் வசிப்போர் நேற்று தமது உறவினர் வீடொன்றுக்குச் சென்று விட்டு வீடு திரும்பியபோது வீட்டின் கதவுகள் திறந்து இருப்பதைக் கண்ணுற்று வீட்டினுள் சென்று பார்த்தபோது, வீட்டினுள் பொருட்கள் சிதறிக் கிடந்துள்ளதுடன் நகைகள் வைக்கப்பட்டு இருந்த அலுமாரியில் இருந்த பொருட்களும் சிதறிக் காணப்பட்டன.

அலுமாரிக்குள் வைக்கப்பட்டிருந்த 11 பவுண் தாலிக்கொடி, ஒன்றரைப் பவுண் சங்கிலி என்பன களவாடப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் வீட்டாரால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.