வல்லிபுர ஆழ்வார் தேரில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலிகள் அறுப்பு!

வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழாவின்போது , ஐந்து பக்தர்களின் தங்கச் சங்கிலிகள் அறுக்கப்பட்டு களவாடப்பட்டுள்ளன என்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வல்லிபுர ஆழ்வாரின் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது.

அதன்போது , ஆலயத்துக்கு வருகை தந்த பக்தர்களில் ஐந்து பேரின் தங்கச் சங்கிலிகள் அறுக்கப்பட்டு களவாடப்பட்டுள்ளது. அவ்வாறு அறுக்கப்பட்ட ஐந்து தங்கச் சங்கிலிகளும் 8 அரை பவுண் நிறையடைய சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியானவை எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.