39 வயதில் இளம் நடிகையை கரம்பிடிக்கப் போகிறாரா.. நடிகர் சிம்பு.?

நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமாகி பின் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டிய பின் ஹீரோவாக விஸ்வரூபம் எடுத்தார் தொடர்ந்து காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை பெருமளவில் உயர்த்திக் கொண்ட இவர் மென்மேலும் உச்சத்தை எட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காதல் பிரச்சனை மற்றும் குடும்ப பிரச்சனை ஆகியவை காரணமாக..

சினிமாவில் நடிக்காமல் உடல் எடையை தாறுமாறாக ஏற்றிக்கொண்டு ஒரு கட்டத்தில் சினிமாவில் இருக்கிறாரா இல்லையா என்ற நிலைமைக்கு ஆளானார் இவருக்கு பின் வந்தவர்கள் சினிமா உலகில் தொடர்ந்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றனர். இதை ஒரு கட்டத்தில் உணர்ந்து கொண்ட நடிகர் சிம்பு தனது எண்ணங்களை எல்லாம் முற்றிலுமாக மாற்றி கொண்டு படங்களில் நடித்துவருகிறார்.

அந்த நடிகை வேறு யாருமல்ல நடிகை நிதி அகர்வால் தான் சிம்புவும் இவரும்  ஈஸ்வரன் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினார் அதன்பிறகு இருவரும் லிவ் இன் முறைபடி வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது ஆனால் உண்மையில் அது எல்லாம் ஒன்னும் கிடையாது. நடிகர் சிம்பு என்னுடைய நல்ல நண்பர் மட்டுமே என நிதி அகர்வால் தரப்பிலிருந்து கூறப்பட்டது. இதற்கு சிம்புவும் பெரிய அளவில் விளக்கம் கொடுக்கவில்லை.

இந்தநிலையில் இப்போதும் ஒரு கிசுகிசு வைரலாகி வருகிறது. அதாவது நாம் இருவரும் செய்யும் விஷயம் சில உண்மை சில உண்மையில்லை இது நம் பெற்றோருக்கு மட்டும் தெரிந்தால் போதும் அதுதான் நமக்கு முக்கியம் என்பது போல நிதி அகர்வால் கூறியுள்ளதாக ஒரு செய்தி காட்டுத் தீ போல வதந்தியாக பரவி வருகிறது. ஆனால் ரசிகர்கள் நடிகர் சிம்புவுக்கு கல்யாணம் நடந்தால் அது வரவேற்கத்தக்க ஒன்று தான் எனக் கூறி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.