உக்ரைன் மக்களுக்காக பிரார்த்திக்கிறேன்…

“ரஷ்ய ராணுவத்தின் தூண்டுதலற்ற மற்றும் நியாயமற்ற தாக்குதல்” என்று ரஷ்யாவின் நடவடிக்கையை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.

இதன்படி ,”உலகின் பிரார்த்தனைகள் உக்ரைன் மக்களுடன் இருக்கின்றன” என்று அவர் கூறியுள்ளார்.

“அதிபர் புதின் ஒரு திட்டமிடப்பட்ட போரைத் தேர்ந்தெடுத்துள்ளார். அது பேரழிவுகரமான உயிர் இழப்பு மற்றும் மனித துயரங்களைக் கொண்டுவரும்,” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் “இந்த தாக்குதலால் ஏற்படும் மரணம் மற்றும் அழிவுக்கு ரஷ்யா மட்டுமே பொறுப்பாகும். அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தீர்க்கமான முறையில் பதிலளிக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.