ரஷ்யப் படையினரால் சுடப்பட்ட இந்திய மாணவன்.

யுக்ரேனின் கார்கிவ் நகரில் கற்றுவந்த நான்காம் ஆண்டு மாணவர், இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்தவர் இவ்வாறு ரஷ்யப் படைகளால் இன்று சூப்பர் மார்க்கெட் ஒன்றின் முன்னால் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதாக அறியவருகிறது.

இதேவேளை இவர் ரஷ்ய எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

உக்ரைன் -ரஷ்யா இடையே ஆறாவது நாளாக போர் நடந்து வருகிறது. கார்கீவ், கீவ் போன்ற நகரங்களில் ரஷ்யா நடத்தி வரும் கடும் தாக்குதலில் இந்திய மாணவர்கள் வெளியேர முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையாக ஒப்ரேஷன் கங்கா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், இந்தப் போர் களத்தில் சிக்கி உக்ரைன் கார்கீவ் நகரத்திலுள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் படித்து வந்த கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்கிற மாணவர் உயிரிழந்துள்ளார்.

இதனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு உறுதி செய்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.