கனரக வாகனத்துடன் கார் மோதி விபத்து: இருவர் மரணம்.

திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதி மரதன்கடவல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காரின் சாரதி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்து இன்று (01) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

றத்மலை பகுதியிலிருந்து ஹொரவ்பொத்தானை நோக்கி மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகனமும் ஹொரவ்பொத்தானையிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற காரும் மோதி விபத்துக்குள்ளானது.

காரில் பயணித்த இருவர் உயிரிழந்த நிலையில், அவர்கள் யார் என்பது பற்றிய விபரம் இன்னும் தெரியவில்லை எனவும் EP CAN-7158 என்ற இலக்க காரில் பயணித்தவர்களே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சடலம் தற்போது ஹொரவ்பொத்தானை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்விபத்து தொடர்பிலான விசாரணைகளை ஹொரவ்பொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.