உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க முன்வந்துள்ள நாடுகள்.!

பல்கேரியா, போலந்து, சுலோவாக்கியா ஆகிய நாடுகள் தங்களுக்கு 70 போர் விமானங்களை தர முன்வந்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதன்படி ,உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் பல்வேறு நாடுகள் உக்ரைனுக்கு உதவ முன்வந்துள்ளன. அதே நேரத்தில் ரஷ்யாவிற்கு பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் அந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மூன்று நாடுகள் உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளன. பல்கேரியா 30 விமானங்களையும், போலந்து 28 விமானங்களையும், சுலோவாக்கியா 12 விமானங்களையும் வழங்குகின்றன.

Leave A Reply

Your email address will not be published.