20 ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் ஸ்ரேயாஸ் அய்யர் முன்னேறியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 20 ஓவர் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் கிடுகிடுவென 27 இடங்கள் எகிறி 18-வது இடத்தை பிடித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான 3 ஆட்டங்களிலும் அரைசதம் அடித்ததால் இந்த ஏற்றம் கிடைத்துள்ளது. இலங்கை 20 ஓவர் தொடரில் இந்திய வீரர் விராட் கோலி ஓய்வு எடுத்ததால் அது அவரது தரவரிசையிலும் எதிரொலித்து இருக்கிறது.

அவர் 5 இடங்கள் சரிந்து 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதே போல் இந்தியாவின் லோகேஷ் ராகுல் 4 இடம் குறைந்து 10-வது இடத்துக்கு பின்தங்கினார். ரோகித் சர்மா 13-வது இடத்தில் உள்ளார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் தொடருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.