ஒட்டுசுட்டானில் காணிப்பிணக்கு; வாள்வெட்டில் நால்வர் படுகாயம்.

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பகுதியில் குடும்ப உறவினர்கள் இரு பகுதியினருக்கிடையில் நீண்டகாலம் ஏற்பட்ட காணிப்பிணக்கு நேற்றிரவு கைகலப்பாக மாறியுள்ளது.

இதன்போது வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தத் தாக்குதலில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பத்தைத் தொடர்ந்து உடனடியாக விரைந்து செயற்பட்ட ஒட்டுசுட்டான் பொலிஸார் மூன்று பேரைக் கைதுசெய்துள்ளனர்.

வயோதிபர் ஒருவர் மீதும் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.