15-வது ஐ.பி.எல் முழு அட்டவணை வெளியீடு..

15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந் தேதி மும்பையில் தொடங்குகிறது. இந்த போட்டிகள் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி முடிவடைகிறது. ஐ.பி.எல்-ன் முதற்கட்ட போட்டிகளில் 40 சதவீதம் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்து இருந்தார்.

மேலும் இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் பயிற்சியில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகளை இந்திய கிரிக்கெட் வாரியம் செய்து வருகிறது.

இந்த நிலையில் ஐ.பி.எல் தொடருக்கான முழு அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. 65 நாட்கள் நடைபெற உள்ள இந்த தொடரில் மொத்தம் 70 போட்டிகள் நடைபெறவுள்ளன. மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

27-ஆம் தேதி இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. அன்று நடைபெறும் முதல் போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அன்று அதை தொடர்ந்து நடைபெறும் போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

மொத்தம் 12 நாட்கள் இரண்டு போட்டிகள் நடைபெறும் எனவும் மே 29 ஆம் தேதி இறுதி போட்டி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.