வெற்றிடமாக இருந்த கல்முனை மாநகர சபை உறுப்பினர் பதவிக்கு ஸமட் ஹமீட் நியமிக்கப்பட்டார் !

அம்பாறை மாவட்ட கல்முனை மாநகர சபையின் புதிய உறுப்பினராக மருதமுனையை சேர்ந்த சமட் ஹமீட் நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா முன்னிலையில் தனது பதவிப்பிரமாணத்தை செய்துகொண்டார்.

இந்த சத்தியப்பிரமாண நிகழ்வில் தேசிய காங்கிரசின் சிரேஷ்ட பிரதித்தலைவரும், வக்பு சபை உறுப்பினருமான டாக்டர் ஏ. உதுமாலெப்பை, பொருளாளரும் தலைவரின் பிரத்தியேக செயலாளருமான வஸீர் எம். ஜுனைட், கல்முனை அமைப்பாளர் ஆசிரியர் றிசாத் செரீப், ஆலோசனை சபை உறுப்பினர் சட்டத்தரனி மர்ஸும் மௌலானா, உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் மருதமுனை மத்தியக்குழுவினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.