உக்ரைனில், அமெரிக்க பத்திரிகையாளர் ரசிய படையினரால் கொல்லப்பட்டார் (வீடியோ)

தலைநகர் அருகே ப்ரென்ட் ரெனாட் மற்றும் மற்றொரு பத்திரிகையாளரின் கார் மீது ரஷ்ய துருப்புக்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கிவ் பிராந்திய காவல்துறை கூறுகிறது.

உக்ரைனில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த அமெரிக்க பத்திரிகையாளரான ப்ரென்ட் ரெனாட்டும் , ஒரு சக ஊழியரும் தலைநகர் கீவ் அருகே ரசிய இராணுவ துப்பாக்கிச் சூட்டில் சிக்கியதாக பிராந்திய காவல்துறை மற்றும் அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தலைநகரில் இருந்து வடமேற்கே சுமார் 10 கிமீ (6 மைல்) தொலைவில் உள்ள இர்பினில் , பிரென்ட் ரெனாட் மற்றும் மற்றொரு பத்திரிகையாளரின் கார் மீது ரஷ்ய துருப்புக்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கிய்வ் போலீஸ் படை ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. காயமடைந்த மற்றைய பத்திரிகையாளர் கியேவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.