கொடிகாமத்தில் முதியவரை தாக்கிவிட்டு நகை, பணம் திருட்டு

தென்மராட்சி – கொடிகாமம் மத்தி நாவலடிப் பகுதியில் நேற்று(10) அதிகாலை திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வயோதிப தம்பதியினர் தனிமையில் வசித்து வந்த வீடு ஒன்றுக்குள் புகுந்து திருடர்கள் வீட்டு உரிமையாளரை தாக்கிவிட்டு 5 பவுண் பெறுமதியான சங்கிலி, மோதிரம் ஆகியவற்றுடன் 65 ஆயிரம் ரூபா பணத்தினையும் திருடிக் கொண்டு தப்பித்துள்ளனர்.

சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளான வீட்டு உரிமையாளரான சிதம்பரம்பிள்ளை சிவராசா (65-வயத) என்பவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Comments are closed.