கேரளாவில் சொத்து தகராறில் மகனின் குடும்பத்தை தீவைத்துக் கொன்ற தந்தை

கேரளாவில் சொத்து தகராறு காரணமாக தனது மகனை குடும்பத்துடன் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சீனிகுழி பகுதியை சேர்ந்தவர் ஹமீது. இவருக்கும், அவரது மகன் முகமது பைசலுக்கும் இடையே பல ஆண்டுகளாக சொத்து தொடர்பாக பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது.

இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு முகமது பைசல் வீட்டுற்கு சென்ற ஹமீது, டேங்கில் இருந்த தண்ணீரை வெளியேற்றியதுடன், மின் இணைப்பையும் துண்டித்துள்ளார்.

பின்னர் தூங்கி கொண்டிருந்த முகமது பைசல், அவரது மனைவி ஷீபா, மகள்கள் மெஹரா, அஸ்னா மீது ஜன்னல் வழியாக பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்ததுடன் 4 பேரின் சடலங்களை மீட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.