கொத்தவரங்காய் வற்றல் குழம்பு.

தேவையானவை:

கொத்தவரை வற்றல் – 1 கைப்பிடி அளவு,
புளி – எலுமிச்சையளவு,
சாம்பார்பொடி – காரத் தேவைக்கு,
உப்பு- திட்டமாக.

தாளிக்க:

எண்ணெய்- 4 ஸ்பூன்,
நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்,
மிளகாய் வற்றல் – 2,
பெருங்காயம் – ½ ஸ்பூன்,
கறிவேப்பிலை – 8 இலைகள்,
துவரம்பருப்பு – 1 ஸ்பூன்,
கடுகு – 1 ஸ்பூன்,
வெந்தயம் – ½ ஸ்பூன்.

செய்முறை:

முதலில் திட்டமாக நீர் ஊற்றிப் புளியை சுமாரான கெட்டியாகக் கரைத்துக் கொண்டு உப்பு, சாம்பார் பொடி சேர்த்து, அடுப்பிலேற்றவும். பக்கத்திலேயே வாணலியைப் போட்டு, நல்லெண்ணெய் ஊற்றித் தாளித்து, அதை கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும். மீண்டும் அதே வாணலியில் எண்ணை சேர்த்து கொத்தவரை வற்றலை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். குழம்பு கொதித்த பச்சை வாசனை போன பிறகு வறுத்த வற்றலை சேர்த்து நன்கு கிளறவும். குழம்பு கொதித்து கெட்டியானதும் இறக்கவும். சிலர் தேங்காய் வறுத்தோ, பச்சையாகவோ அரைத்துச் சேர்ப்பார்கள். அது அவரவர் சுவையின் விருப்பம்.

Leave A Reply

Your email address will not be published.