அடுத்த பாகிஸ்தான் பிரதமர் யார்? – இம்ரான் பரிந்துரை.

இடைக்கால பிரதமராக பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி குல்சார் அகமதுவை பரிந்துரை செய்து அதிபர் ஆரிப் அல்விக்கு இம்ரான்கான் கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் பணி குல்சார் அகமது தலைமையில் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளது பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு.

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய பிரதமர் இம்ரான்கான் பரிந்துரை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.